தேவையானவை: ரவை - ஒரு கப், வறுத்த தேங்காய் துருவல் - அரை கப், சர்க்கரை - ஒரு கப், வறுத்த முந்திரி, திராட்சை - தலா ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - 50 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: ரவையை நெய்யில் சிவக்க வறுத்து எடுக்கவும். ரவை, முந்திரி, திராட்சை, ஏலக்காய்த் தூள், தேங்காய் துருவல் ஆகியவற்றை கலந்து கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து சர்க்கரை, சிறிதளவு நீர் சேர்த்து, நுரைக்குபோது சிறிது பால் விட்டு அழுக்கு நீக்கி கொதிக்கவிட்டு, ஒற்றை கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். இதை ரவை கவலையில் சேர்த்து உருண்டைகள் பிடிக்கவும்.
No comments:
Post a Comment