Tuesday, February 16, 2016

டிப்ஸ்... டிப்ஸ்...

ல்லாரைக் கீரையை சுத்தம் செய்து, பத்து இலைகளை எடுத்து, ஐந்து மிளகு சேர்த்து அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று மாதம் குடித்து வந்தால்... தளர்வுற்ற தேகம் பலம் பெறும்; மூளை திசுக்கள் வலுப்பெறும்; நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

வையை உப்பு போட்டு பிசறி வைத்து, அதனுடன் அரைத்த உளுந்து மாவை சேர்த்து தோசை வார்த்தால், சுவையோ சுவை!

வாழைப்பூவை அரைத்து சாறெடுத்து, அச்சாற்றின் அளவு பனங்கற்கண்டு சேர்த்து பருகி வந்தால்... மாதவிடாய் ரத்தப்போக்கு அதிகமாதல், வெள்ளைப்படுதல் சரியாகும்.

ஜாங்கிரி செய்யும்போது நீரில் ஊறவைத்த உளுத்தம்பருப்பை விழுதாக அரைத்து, அத்துடன் ஒரு கப் உளுந்து விழுதுக்கு ஒரு டேபிள்ஸ்பூன் அரிசி மாவைக் கலக்கவும். அப்படிச் செய்தால் எண்ணெய் அல்லது நெய்யில் ஜாங்கிரி பிழியும்போது, உடைந்து போகாமல் முழுசாக வரும். சுவையும் ‘ஏ-ஒன்’தான்!

காய்கறிகளை பாலித்தீன் கவரில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கப் போகிறீர்களா? கவர்களில் கோணி ஊசியால் குத்தி துளைகள் போட்ட பின், காய்களை அதில் வைத்தால், காய்கள் பல நாட்கள் அழுகாமல் இருக்கும்.

ழைய சாதம் மிகுந்துவிட்டால் அதனுடன் உப்பு சேர்த்து அரைத்து, ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து, ஆப்பமாக செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்.


பால் சேர்க்காத தேநீரில் கொஞ்சம் தேன் விட்டு சாப்பிட்டால்... தொண்டை கட்டு விலகும்; தொண்டை கரகரப்பு நீங்கும்.

மோர்க்குழம்பு கொதித்து இறக்கும்போது, சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கினால், நல்ல வாசனையாக இருக்கும்.

கக்கண்ணில் வீக்கமும் வலியும் இருந்தால், ஒரு கரண்டியில் நல்லெண்ணெய் ஊற்றி சுடவைத்து, ஒரு துணியில் உப்பை மூட்டையாக கட்டி, எண்ணெயில் தோய்த்து, லேசான சூட்டில் நகக்கண்ணில் ஒற்றினால், விரைவில் சரியாகும்.

Sunday, August 9, 2015

கிரீன் வெஜிடபிள் சாலட்


 தேவையானவை: பீட்ரூட் - 6, தண்ணீர் - ஒரு கப், பேபி சாலட் (கொத்தமல்லி,பசலை கீரை ) - 8 கப், பார்ஸ்லி இ்லை - ஒரு கப், வெள்ளை வினிகர் - ஒரு டேபிள் ஸ்பூன், கல் உப்பு - கால் டீஸ்பூன், கருப்பு மிளகுப்பொடி - கால் டீஸ்பூன், ஆலிவ் ஆயில் -2 டேபிள் ஸ்பூன், சீஸ்- அரை கப், லேசாக வறுத்த வால்நட் - கால் கப், வேகவைக்காத நறுக்கிய காய்கறிகள் - தேவையான அளவு.
செய்முறை: மைக்ரோ அவனில், 375 டிகிரி சூட்டில் அரை மணி நேரம் வரை பீட்ரூட்டை வேகவைக்கவும். பீட்ரூட்டில் இருக்கும் தண்ணீர் வற்றிய பிறகு, பீட்ரூட்டை வட்ட வடிவில் நறுக்கிக்கொள்ளவும், பார்ஸ்லி இலைகள் மற்றும் பேபி சாலட், காய்கறிகள், பீட்ரூட் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் வினிகர், உப்பு, மிளகுப்பொடி ஆகியவற்றைச் சேர்த்து லேசாகக் கிளறினால், சாலட் ரெடி.
பலன்கள்: வைட்டமின் பி6, கோலின், பீட்டைன் (Betaine), மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம், செலினியம் ஆகியவை நிறைந்த உணவு. பீட்ரூட் ரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்றவை வராமல் தடுக்கும். எடை அதிகமாக உள்ளவர்கள் எடை குறைய இந்த உணவை எடுத்துக்கொள்ளவும். வைட்டமின் சி, வைட்டமின் ஏ ஆகியவை நிறைந்தது. சளி பிரச்னை உள்ளவர்கள், ஆஸ்துமா, சைனஸ் உள்ளவர்களுக்கு இந்த உணவு ஏற்றது.

டாலியா (DALIYA)


தேவையானவை: டாலியா  (சம்பா கோதுமை) - அரை கப், தண்ணீர் - ஒன்றேகால் கப், நறுக்கிய பெரிய வெங்காயம் -1, நறுக்கிய ் பச்சை மிளகாய்- 1, இஞ்சிப்பூண்டு பேஸ்ட் -அரை டீஸ்பூன், நறுக்கிய கேரட் -1, நறுக்கப்பட்ட பீன்ஸ் -6, மிளகாய் பவுடர் -அரை டீஸ்பூன் (தேவைப்பட்டால் மட்டும் சேர்த்துக்கொள்ளவும்), மல்லிப் பொடி - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், சீரகப்பொடி -அரை டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன்
செய்முறை: சம்பா கோதுமையை  கால் கப் வெந்நீர் விட்டு, 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சீரகப்பொடி, கடுகு, வெங்காயம், தக்காளி சேர்த்து, நன்றாக வதக்கவும். பின்னர், பச்சை மிளகாய், இஞ்சிப்பூண்டு பேஸ்ட் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் வதக்கவும். அதன் பின்னர் கேரட், பீன்ஸ், மிளகாய்ப் பொடி, மல்லிப்பொடி, உப்பு, ஊறவைத்த சம்பா கோதுமை சேர்த்து, குக்கரில் மூன்று விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும். சூடாகச் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.
பலன்கள்: கார்போஹைட்ரேட் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவு இது. காலை உணவாகச் சாப்பிடுவது நல்லது. சர்க்கரை நோயாளிகள், உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற உணவு.

ஸ்ட்ராபெர்ரி ஜூஸ்



தேவையானவை: ஸ்ட்ராபெர்ரி - 150 கிராம், தண்ணீர் - 200 மி.லி, சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
செய்முறை: ஸ்ட்ராபெர்ரி பழத்தை நன்றாகக் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி, சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து, மிக்ஸியில் அரைக்கவும். தேவையான அளவு ஐஸ் சேர்த்து அருந்தவும்.
பலன்கள்: ஸ்ட்ராபெர்ரியில் ஆன்தோசயனின் நிறைந்திருப்பதால் கெட்ட கொழுப்பு எரிக்கப்படும். மேலும், வைட்டமின் கே, பொட்டாசியம், மக்னீசியம் போன்றவையும் இந்த ஜூஸில் கிடைக்கின்றன. ஸ்ட்ராபெர்ரியில் உள்ள பயாட்டின், தலைமுடிகளை உறுதியாக்கும். நகங்கள் வளர்ச்சிக்கு உதவக்கூடியது. சருமம் பளபளக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்திருப்பதால் ரத்த அழுத்தம், இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

ராஜ்மா பனீர் கறி

 
தேவையானவை: ராஜ்மா  ஒன்றரை கப்,  நறுக்கப்பட்ட பனீர் -150 கிராம், வெங்காயம் -2 (நடுத்தரமான அளவில்), தக்காளி -2, இஞ்சிப்பூண்டு பேஸ்ட் - இரண்டு டீஸ்பூன், மஞ்சள் போடி - அரை டீஸ்பூன், மிளகாய்ப் பொடி -அரை டீஸ்பூன், மல்லிப்பொடி - 1 டீஸ்பூன், சீரகப்பொடி - அரை டீஸ்பூன், கரம் மசாலா - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - மூன்று டேபிள் ஸ்பூன்.
செய்முறை: இரவே ராஜ்மாவை ஊறவைக்க வேண்டும். ஊறிய ராஜ்மாவைத் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். கடாயில் சிறிதளவு எண்ணெய்விட்டு, நறுக்கிய வெங்காயம், சீரகப்பொடி சேர்த்து, இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பின்னர், இஞ்சிப்பூண்டு பேஸ்ட் சேர்த்து, பேஸ்ட் பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். பிறகு, தக்காளி, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி. மல்லித்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். கடைசியாக பனீர் துண்டுகள் மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, வேகவைத்த ராஜ்மா மற்றும் கரம் மசாலாவைக் கடாயில் போட்டு மிதமான சூட்டில் 10 நிமிடங்கள் வரை வேகவைக்கவும். இந்த ராஜ்மா பன்னீர் கறியை வேகவைத்த அரிசி சாதம் அல்லது பராத்தா, ரொட்டி போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.
பலன்கள்: பனீர் மற்றும் ராஜ்மா இருப்பதால், இதில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து நிறைந்துள்ளது. போலேட், மக்னீசியம், கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருப்பதால், அனைவரும் சாப்பிடலாம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், பனீர் குறைவாகவும் ராஜ்மா அதிகமாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Saturday, August 8, 2015

ஹைதராபாத் மட்டன் பிரியாணி


தேவையானவை: மட்டன்- 400 கிராம், வெங்காயம் - 300 கிராம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மிளகாய்ப் பொடி, கரம் மசாலா, புதினா, கொத்தமல்லி - தலா 40 கிராம், கிராம், தயிர்-100 மி.லி, எலுமிச்சை - 1, ஏலக்காய், கருஞ்சீரகம் - தலா 20 கிராம், எண்ணெய் - 40 மி.லி, நெய் - 60 மி.லி, உப்பு, குங்குமப் பூ - தேவைக்கு ஏற்ப.

செய்முறை: இஞ்சி, பூண்டு இரண்டையும் தோல்நீக்கி அரைத்துக்கொள்ளவும். கொத்தமல்லி, புதினா இலைகளை அரைத்துக்கொள்ளவும். கடாயில், எண்ணெய்விட்டு 100 கிராம் வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கிக்கொள்ளவும்.
பாத்திரத்தில் மட்டனை எடுத்து அதோடு மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, கரம் மசாலா, குங்குமப்பூ, எலுமிச்சைச் சாறு, வேகவைத்த வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு, கொத்தமல்லி, புதினா பேஸ்ட், எண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து, இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
பெரிய கடாயில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். அதில் இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய், ஒரு லவங்கப்பட்டை, இரண்டு பிரிஞ்ஜி இலை, எண்ணெய் சிறிதளவு, கருஞ்சீரகம், நான்கு மிளகு சேர்க்கவும். இந்தத் தண்ணீரில், தேவைக்கேற்ப கழுவிய பாஸ்மதி அரிசியைப் போட்டு இரண்டு நிமிடங்கள் மட்டும் வேகவிடவும். பின்னர் அதிலிருந்து தண்ணீரை வடிகட்டி, அரைப்பங்கு அரிசியைப் பிரித்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
வடிகட்டிய தண்ணீரை அரைப்பங்கு அரிசியில் போட்டு, நன்கு கொதிக்கவிடவும். மட்டன் கலவையை எடுத்து, பிரியாணி செய்யவிருக்கும் பாத்திரத்தில் வைத்து, அரிசியை வேகவைத்த நீரில் சேர்க்கவும். தண்ணீர் ஊற்றுவதால் மட்டன் மிருதுவாகும். பின்பு,  இரண்டு நிமிடங்கள் மட்டும் வேகவைத்த அரிசியை, மட்டனுடன் சேர்த்து, 10 நிமிடங்கள்  கொதிக்கவைக்கவும். கொஞ்சம் பொன்னிற வெங்காயத்தையும், சில சொட்டு குங்குமப்பூ கலந்த பாலையும், இரண்டு ஸ்பூன் நெய்யையும், கரம் மசாலாவையும் சேர்த்து, 25 நிமிடங்கள் மட்டனும் அரிசியும் மிருதுவாகும் வரை வேக வைக்கவும். அடுத்து மிச்சம் இருக்கும் அரிசியைச் சேர்த்து, மீண்டும் பொன்னிற  வெங்காயம், சில துளி குங்குமப்பூ பால், கொத்தமல்லி, புதினா, நெய் சேர்த்தால் பிரியாணி ரெடி. பரிமாறும் முன்பு பிரியாணியை நன்கு கிண்ட வேண்டும். அப்போதுதான் மசாலா நன்கு கலக்கும். 
பலன்கள்: மட்டனில் வைட்டமின் பி12 அதிகம் இருக்கின்றன.
பொதுவாக,  வைட்டமின் பி12 அசைவ உணவுகளில் மட்டுமே இருக்கும். நம் நாட்டில் பெரும்பாலானவர்களுக்கு பி12 பற்றாக்குறை இருக்கிறது. வைட்டமின் பி12 அதிக சிவப்பு அனுக்களை உற்பத்தி செய்யும், எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இதயப் பிரச்னை உள்ளவர்கள் எலும்பை ஒட்டி இருக்கும் கரியை எடுத்துக்கொண்டால், இதயத்துக்கு மிகவும் நல்லது.  ஒமேகா 3, ஒமேகா 6 அதிகம் இருப்பதால், நல்ல கொழுப்பு அதிகமாக இருக்கும். கெட்ட கொழுப்புகள் இருக்காது. புரதச்சத்து மூளையைச் சுறுசுறுப்பாக இயங்கவைக்கும், உடம்பில் சதை வளர உறுதுணையாக இருக்கும். வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வாரத்துக்கு ஒரு முறை மட்டும் என, இந்த உணவை எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லது.

ஆரஞ்சு ஜூஸ்


தேவையானவை: ஆரஞ்சு - இரண்டு, தண்ணீர், சர்க்கரை , ஐஸ் கட்டி - தேவையான அளவு.
செய்முறை: ஆரஞ்சுப் பழங்களை சாறு எடுத்து, வடிகட்டிக்கொள்ளவும். அதனோடு,  ஐஸ் கட்டிகள், தேவையான அளவு தண்ணீர், சர்க்கரை சேர்த்து, மிக்ஸியில் போட்டுச் சுற்றினால், ஆரஞ்சு ஜூஸ் ரெடி.
பலன்கள்: ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும்  (Hesperetin)  ஹெஸ்பிரிடின், நாரின்ஜின் (Naringin) நாரிஜெனின் (Naringenin)  ஆகிய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் குடல் புற்றுநோய் வருவதில் இருந்து காக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவும். இதில் உள்ள  சத்துகள் பார்வைத் திறனை அதிகரிக்கவும், சருமத்தைப் பளபளப்பாக வைத்துக்கொள்ளும்.
தையமின்,  பைரிடோக்ஸின், ஃபோல்டேட்ஸ் ஆகியவை நம் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும், தொற்று வியாதிகள் பரவாமல் பாதுகாக்கும். ஆரஞ்சில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் கால்சியம் இதயத் துடிப்பையும் செம்மையாக வைத்திருப்பதோடு ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும்.  பெக்டின் என்னும் சத்து ஆரஞ்சில் நிறைந்திருப்பதால், மலச்சிக்கல், குடலில் கட்டிகள் வராது.