Sunday, July 19, 2015
வாழைத்தண்டு மோர்
தேவையான பொருட்கள்:
புளிக்காத மோர் - ஒரு டம்ளர்,
வாழைத்தண்டு - ஒரு பெரிய துண்டு,
கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு - ருசிக்கேற்ப,
பூண்டு - பாதி,
சின்ன வெங்காயம் - 1.
செய்முறை:
• வாழைத்தண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• கொத்தமல்லியை நன்றாக கழுவி வைக்கவும்.
• பூண்டு, சின்ன வெங்காயத்தின் தோலை நீக்கவும்.
• மிக்சியில் மோருடன் எல்லாப் பொருட்களையும் சேர்த்து அரைத்து வடிகட்டிப் பயன்படுத்தவும்.
குறிப்பு: பூண்டு வாசம் பிடிக்காதவர்கள், தவிர்த்துவிடலாம்.
Sunday, July 5, 2015
ஓட்ஸ் சேமியா இட்லி
தேவையான பொருட்கள் :
ஓட்ஸ் - 1 கப்
சேமியா - 1 கப்
தயிர் அரை - கப்
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
ப.பட்டாணி - சிறிதளவு பொடியாக நறுக்கியது
கேரட் - 1 (துருவியது)
தாளிக்க :
கடுகு கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
• சேமியாவை வறுத்து பொடித்து கொள்ளவும்.
• கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளித்து கேரட், பட்டாணியை போட்டு சிறிது வதக்கவும்.
• பின்னர் அதில் வறுத்த சேமியா, ஓட்ஸ் போட்டு சிறிது கிளறி இறக்கி ஆற விடவும்.
• ஆறியதும் அதில் தயிர், சமையல் சோடா, உப்பு சேர்த்து நன்றாக இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்.
• இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து இந்த கலவையை இட்லிகளாக ஊற்றி 8 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
• சத்தான சுவையான ஓட்ஸ் சேமியா இட்லி ரெடி
ஓட்ஸ் - 1 கப்
சேமியா - 1 கப்
தயிர் அரை - கப்
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
ப.பட்டாணி - சிறிதளவு பொடியாக நறுக்கியது
கேரட் - 1 (துருவியது)
தாளிக்க :
கடுகு கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
• சேமியாவை வறுத்து பொடித்து கொள்ளவும்.
• கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளித்து கேரட், பட்டாணியை போட்டு சிறிது வதக்கவும்.
• பின்னர் அதில் வறுத்த சேமியா, ஓட்ஸ் போட்டு சிறிது கிளறி இறக்கி ஆற விடவும்.
• ஆறியதும் அதில் தயிர், சமையல் சோடா, உப்பு சேர்த்து நன்றாக இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்.
• இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து இந்த கலவையை இட்லிகளாக ஊற்றி 8 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
• சத்தான சுவையான ஓட்ஸ் சேமியா இட்லி ரெடி
கொண்டைகடலை - முருங்கை கீரை அடை
தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1 கப்
கடலைப்பருப்பு - 1 கப்
கொண்டைகடலை - 1 கப்
பாசிபருப்பு - 1 கப்
பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
முருங்கை கீரை - 1 கப்
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
வெங்காயம் - 2
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - சிறிதளவு
சீரகத்தூள் - அரை ஸ்பூன்
செய்முறை :
• மேலே சொன்ன பருப்பு வகைகளை 4 மணி நேரம் ஊற வைத்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
• பெருஞ்சீரகத்தை ஒன்றும் பாதியாக பொடித்து கொள்ளவும்.
• முருங்கை கீரை, கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு அதில் நறுக்கிய முருங்கைகீரை, கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம், பெருஞ்சீரம், மிளகாய் தூள், உப்பு, சீரகப்பொடியை போட்டு நன்றாக மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.
• தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் இந்த மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
• சுவையான சத்தான கொண்டைகடலை - முருங்கை கீரை அடை ரெடி.
கோடைக்கு இதம் தரும் வெள்ளரி மோர் பானம்
தேவையான பொருட்கள்:
மோர் - 1 கப்
வெள்ளரிக்காய் - 1
உப்பு - தேவையான அளவு
ஐஸ் கியூப்ஸ் - 5
மிளகு தூள் - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
இஞ்சி - சிறிதளவு
செய்முறை :
மோர் - 1 கப்
வெள்ளரிக்காய் - 1
உப்பு - தேவையான அளவு
ஐஸ் கியூப்ஸ் - 5
மிளகு தூள் - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
இஞ்சி - சிறிதளவு
செய்முறை :
• கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• வெள்ளரிக்காயின் தோலை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்னர் நறுக்கிய வெள்ளரிக்காய், இஞ்சிய மிக்சியில் போட்டு சிறது தண்ணீர் சேர்த்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
• ஒரு கண்ணாடி டம்ளரில் முதலில் வெள்ளரி சாறை ஊற்றவும். பின் மோர் ஊற்றி அதன் மேல் உப்பு, மிளகு தூள், கொத்தமல்லி தழை தூவி நன்றாக கலந்து பருகவும்.
• மோர், வெள்ளரி இரண்டும் கோடை வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சி தருபவை. கோடைக்காலத்தில் இவ்வாறு அடிக்கடி செய்து சாப்பிடும் போது உடலில் உள்ள நீர்சத்து குறையால் தடுக்கலாம். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அவ்வாறு செய்து குடிக்கலாம்.
• வெள்ளரிக்காயின் தோலை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்னர் நறுக்கிய வெள்ளரிக்காய், இஞ்சிய மிக்சியில் போட்டு சிறது தண்ணீர் சேர்த்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
• ஒரு கண்ணாடி டம்ளரில் முதலில் வெள்ளரி சாறை ஊற்றவும். பின் மோர் ஊற்றி அதன் மேல் உப்பு, மிளகு தூள், கொத்தமல்லி தழை தூவி நன்றாக கலந்து பருகவும்.
• மோர், வெள்ளரி இரண்டும் கோடை வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சி தருபவை. கோடைக்காலத்தில் இவ்வாறு அடிக்கடி செய்து சாப்பிடும் போது உடலில் உள்ள நீர்சத்து குறையால் தடுக்கலாம். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அவ்வாறு செய்து குடிக்கலாம்.
Subscribe to:
Posts (Atom)