Sunday, July 5, 2015

கோடைக்கு இதம் தரும் வெள்ளரி மோர் பானம்

தேவையான பொருட்கள்: 

மோர் - 1 கப் 
வெள்ளரிக்காய் - 1 
உப்பு - தேவையான அளவு 
ஐஸ் கியூப்ஸ் - 5 
மிளகு தூள் - சிறிதளவு 
கொத்தமல்லி தழை - சிறிதளவு 
இஞ்சி - சிறிதளவு
செய்முறை : 


• கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

• வெள்ளரிக்காயின் தோலை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்னர் நறுக்கிய வெள்ளரிக்காய், இஞ்சிய மிக்சியில் போட்டு சிறது தண்ணீர் சேர்த்து சாறு எடுத்துக் கொள்ளவும். 

• ஒரு கண்ணாடி டம்ளரில் முதலில் வெள்ளரி சாறை ஊற்றவும். பின் மோர் ஊற்றி அதன் மேல் உப்பு, மிளகு தூள், கொத்தமல்லி தழை தூவி நன்றாக கலந்து பருகவும். 

• மோர், வெள்ளரி இரண்டும் கோடை வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சி தருபவை. கோடைக்காலத்தில் இவ்வாறு அடிக்கடி செய்து சாப்பிடும் போது உடலில் உள்ள நீர்சத்து குறையால் தடுக்கலாம். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அவ்வாறு செய்து குடிக்கலாம்.

No comments:

Post a Comment