தேவையானவை: கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு - தலா 100 கிராம், வெங்காயம் - 2 (நறுக்கவும்), கேரட் துருவல் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 8, கொத்தமல்லி - அரை கட்டு (நறுக்கவும்), மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பெருங்காயம், உப்பு - சிறிதளவு.
செய்முறை: பருப்பு வகைகளை ஒன்றாக சேர்த்து ஒரு மணி ஊற விட்டு... உப்பு, மிளகாய், பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் கேரட் துருவல், வெங்காயம் கலந்து பிசிறி, உருண்டைகளாக்கி, ஆவியில் 7-ல் இருந்து 10 நிமிடம் வரை வேகவிட்டு எடுக்கவும். மேலே கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
No comments:
Post a Comment